Archives: செப்டம்பர் 2015

ஈக்களின் நினைவூட்டல்

நான் தற்பொழுது வாடகைக்கு எடுத்துள்ள சிறிய அலுவலகத்தில் எனது வேலையை ஆரம்பித்தபொழுது, அங்கு வாழ்த்து வந்தவை ஒருசில மோப்பி இன ஈக்கள்தான். அநேக ஈக்கள் இறந்து அவற்றின் உடல்கள் தரையிலும், ஜன்னல்களிலும் சிதறிக் கிடந்தன. அவற்றில் ஒன்றைமட்டும் என் பார்வைபடுமாறு விட்டுவிட்டு மற்ற ஈக்களை அப்புறப்படுத்திவிட்டேன்.

ஓவ்வொரு நாளையும் நான் நலமாக வாழ அந்த இறந்து போன ஈயின் உடல் எனக்கு நினைவூட்டியது. ஜீவனைப் பற்றி நினைவூட்ட மரணம் சிறந்த காரியமாகும். ஜீவன் ஒரு விலைமதிப்பற்ற பரிசு. “உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு.” (வச 4)…

மெல்லிழைத்தாள் பெட்டிகள் (TISSUE BOXES)

அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் அறையில் நான் அமர்ந்திருந்தபொழுது, சிந்திப்பதற்கு எனக்கு நேரம் கிடைத்தது. மிக இளம் வயதுடைய எனது ஒரே சகோதரனுக்கு “மூளைச்சாவு” ஏற்பட்டுவிட்டது என்ற துக்ககரமான செய்தியை நான் கேள்விப்பட்டு ஒருசில நாட்களுக்கு முன் இதைப்போலவே காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தேன்.

அதுபோல இந்த நாளில் மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சை உட்பட்டிருந்த, எனது மனைவியைப் பற்றிய செய்திக்காக அதே காத்திருப்பு அறையில் காத்துக் கொண்டிருந்தபொழுது, எனது மனைவிக்கு நீண்ட பெரிய கடிதம் ஒன்று எழுதினேன். மனக்கலக்கத்துடன் கூடிய உரையாடல்கள் ஏதுமறியாத பிள்ளைகள் இவர்களால்…

உபத்திரவங்கள் மூலம் கற்றுக் கொள்ளுதல்

அந்த மெகா திரையில் காணப்பட்ட தெளிவான படத்தில் அந்த மனிதனை உடலில் ஏற்பட்டிருந்த ஆழமான வெட்டுக் காயங்களை அருகிலும், தெளிவாகவும் காணமுடிந்தது. ஒரு இராணுவ வீரன் அந்த மனிதனின் அடிக்க, இரத்தத்தினால் கறைபட்டிருந்த முகத்தையுடைய அந்த மனிதனை சூழ்ந்து நின்ற ஒரு கூட்ட மக்கள் கோபத்துடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள். திறந்த வெளி திரையரங்கின் அமைதியான சூழ்நிலையில் அந்தக் காட்சி மிகவும் தத்ரூபமாக இருந்தது. ஆகவே அந்த மனிதனுக்கு ஏற்பட்ட வலியை நானே உணர்ந்ததால் அதிகம் மனஉளைச்சல் கொண்டு முகத்தைச் சுழித்துக் கொண்டேன். ஆனால் இது…

விடிகாலை 2 மணி சிநேகிதர்கள்

கிறிஸ்துவுக்குள்ளான ஆழமான விசுவாசத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் ஒரு குழு மக்களைப் பற்றி என் சிநேகிதன் என்னிடம் கூறினான். “யாருக்காவது ஏதாவது அவசரமான உதவி தேவை என்று நான் எண்ணினால், தயக்கமில்லாமல் உங்களில் யாரையாவது அதிகாலை 2 மணிக்கு உதவிக்குக் கூப்பிடலாம் என்று எண்ணுகிறேன்” என்று அவர்களில் 93 வயது நிரம்பிய ஒரு பெண் கூறினாள். அந்த அவசர உதவி ஒருவேளை ஜெபத்தேவையாகவோ, உதவக்கூடிய செயலாகவோ அல்லது தேவைப்படும் சமயத்தில் யாராவது உதவிக்கு இருக்கவேண்டும் என்ற சூழ்நிலையோ, எதுவாக இருந்தாலும் அந்த விசுவாசக் கூட்டத்திலிருந்த…

தேவனுக்குக் கரிசனை இல்லையா?

குடிபோதையில் வாகனத்தை ஓட்டினவன் காயமின்றித் தப்பித்துக்கொள்கிறான், ஆனால் அதே சமயம் அவனால் விபத்துக்குள்ளான, குடிபோதையில்லாத மனிதன் பயங்கரமாக காயப்படுகிறான். ஏன்? தீமை செய்கிறவர்கள் செழித்தோங்குகிறார்கள். நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள் ஏன்? உங்களது வாழ்க்கையில் ஏற்படுகிற நிகழ்ச்சிகளைக் குறித்து அநேகமுறை நீங்கள் மனக்குழப்பமடைந்து “தேவன் என்னைக் குறித்து கரிசனைப்படுகிறாரா?” என்று கதறியுள்ளீர்கள்.

அநீதியும், கொடுமையும் கட்டுக்கு மிஞ்சி செல்லும் சூழ்நிலைகளை யூதாவில் கண்டபொழுது ஆபகூக் என்ற தீர்க்கன் இதே கேள்வியைக் கேட்டு மனதில் போராடினான். (ஆபகூக் 1:1-4) அவனது குழப்பமான நிலையில் தேவன் எப்பொழுதும் இந்த நிலையை…

கைவிடப்பட்டதாக உணர்தல்

C.S. லூயிஸ், ஸ்குரு டேப் கடிதங்கள் என்ற அவரது புத்தகத்தில் ஒரு மூத்த பிசாசும், ஒரு இளைய பிசாசும் ஒரு கிறிஸ்துவனை விசுவாசத்திலிருந்து விழவைக்க எந்தமுறையில் சோதிக்கலாம் என்று பேசிக்கொண்ட கற்பனை உரையாடலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அந்த இரு பிசாசுகளும் அந்த விசுவாசிக்கு தேவன்மேல் இருந்த விசுவாசத்தை அழித்துவிட விரும்பின. “ஏமாற்றப்பட்டு விடாதே. இந்த அண்டசராசரத்தில் தேவனைப் பற்றிய அனைத்து அடையாளங்களும் மறைந்து விட்டதுபோல் காணப்பட்டாலும், தேவன் அவனை ஏன் கைவிட்டுவிட்டார் என்ற கேள்வியை தனக்குள்ளே கேட்டுக்கொண்டாலும், தேவனுக்கு கீழ்ப்படிகிறவனாக அவன் இருந்தால் நாம்…

தேவனின் திசை காட்டும் கருவி

வட கரோலினாவிலிருந்து 300 மைல் தொலைவிலிருந்து 27 கடல் பயணிகளை சிறிய திசை காட்டும் கருவிகள் காப்பாற்றின. ஓய்வு பெற்ற வால்டிமார் செமினோவ் என்ற கடல் வியாபாரி அச்சமயத்தில் இளநிலைப் பொறியாளராக ss அல்கோ கைடு என்ற கப்பலில் பயணம் செய்தபொழுது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நீர் மூழ்கிக் கப்பலொன்று அவர் பயணம் செய்த கப்பலை நோக்கிச் சுட்டது அந்தக் கப்பல் சுடப்பட்டு தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்க ஆரம்பித்தது. செமினோவும் உடன்பயணிகளும் திசை காட்டும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த உயிர்காக்கும் படகுகளை கடலில் இறக்கினார்கள்.…

சொல்லும் செயலும்

எனது கல்லூரியில் எழுதும் பயிற்சி வகுப்பிலிருந்த ஒரு மாணவனிடமிருந்து வந்த மின்னஞ்சல் அவசரத் தன்மையை வெளிப்படுத்தினது. கல்லூரியின் இறுதிப்பருவத்திலிருந்த அவனுக்கு, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள சற்று உயர்ந்த மதிப்பெண்கள் தேவை என்பதை உணர்ந்தான். அதற்கு அவன் என்ன செய்ய இயலும், செய்ய வேண்டிய பாடசம்பந்தமான சில வேலைகளை அவன் செய்யத் தவறி இருந்தான். ஆகவே அவனுடைய மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்து விடுபட்ட வேலையை முடிக்கக் கூறினேன். “நன்றி அதனை உடனே செய்கிறேன்” என்று மாறுத்தரம் கூறினான்.

இரண்டு நாட்கள்…

இவ்விதமாய் அன்புகூர்ந்த தேவன்

முதல் உலகப்போர் ஆரம்பத்தின் நூறாம் ஆண்டு நினைவு நாள் பிரிட்டனில் 2014 ஜூலை 28ல் நினைவு கூரப்பட்டது. பிரிட்டனில் அநேக ஊடகங்களில் அநேக விவாதங்கள் குறுந்திரைப் படங்கள் மூலம் 4 ஆண்டுகள் நடந்த போரைப் பற்றி நினைவுபடுத்தின. உண்மையாகவே லண்டனில் இருந்த ஒரு பல்பொருள் அங்காடி பற்றி திரு. செல்ஃப்ரிட்ஜ் என்ற ஒளிப்பட நிகழ்ச்சி 1914ல் நடந்த ஒரு நிகழ்ச்சியை விளக்கிற்று. அதில் தரைப்படையில் சேருவதற்கென்று இளம் வாலிபர்கள் தன்னார்வத்துடன் வரிசையில் நிற்பது காண்பிக்கப்பட்டது. தங்களையே தியாகம் செய்த அந்த வாலிபர்களை எண்ணின பொழுது…